இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீனுவும் சிறுத்தையும் -2

'ஓ தெரியுமே...பக்கத்து ஊர் தலைவரோட தலையை அது சாப்பிட்டுருச்சாம்.  தனக்குத்தானே விஷம் வெச்சிட்டு செத்துடுச்சு 'என்றான் சாரு...இதைக் கேட்டதும் சீனுவிற்கு சிரிப்புதான் வந்தது ..அந்த ஊர்த் தலைவரை யாருக்கும் பிடிப்பதில்லை... அவர்கள் மேலும் பேசாமல் கெம்டியை நோக்கி விரைந்து சென்றனர்.அப்போது அவர்களை நோக்கி தபால் மணி வந்து கொண்டிருந்தார். 'எங்களுக்கு ஏதாச்சும் கடுதாசி வந்து இருக்கா' என்று கேட்டான் சீனு.அவர்களுக்கு என்றும் கடுதாசி வந்ததில்லை. ஆனால் யார் யாருக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற ஆவல் அவர்களுக்கு எப்போதும் உண்டு. கர்னல் ராம் அவர்கள் தம் குடும்பத்திற்கு எழுதிய அஞ்சல் மட்டும் இருந்தது. அவருக்கு லடாக்கில் பணி இருப்பதாகவும், அங்கு மிகவும் குளிராக இருப்பதாகவும் எழுதியிருந்தார். அடுத்த மாதத்தில் பணி உயர்வு கிடைக்கலாம் என்றும்  எழுதியிருந்தார்.உரை இட்ட கடிதம் அல்லாமல் இதுபோன்ற அஞ்சல் அட்டைகள் எழுதும் விபரங்கள் மற்றவர்களால் படிக்கப்படும் என்பது அவருக்கும் தெரியும். ஊர் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே விபரங்கள் அஞ்சலட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரவர், அவர்களது பாதையில் செல...

சீனுவும் சிறுத்தையும் -1

அதிகாலை பொழுது. சேவல் கூட படுத்து உறங்கும் வேளையில் சீனுவிற்கு மட்டும் உறக்கம் பறந்தோடியது. அவனது நாய் கூட வீட்டின் மூலையில் நெருப்புக் கங்குகள் இன் வெப்பத்தில் குளிர் காய்ந்த வண்ணம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. சீனு போர்வையை விலக்கி சுவற்றை நோக்கினான்.அவன் வீட்டுச் சுவற்றில் மரியாதைக்குரிய பொருளாக ஒரு பழைய கடிகாரம் தொங்கிக்கொண்டிருந்தது.அதில் மணி 5 என காட்டியது.சீனு விற்கு இன்னும் அரை மணி நேரமே இருந்தது.அதற்குள் அவன் குளித்து கிளம்பவேண்டும். நெட்டி முறித்து அவன் எழுந்து சென்று கதவைத் திறக்கையில் அவனது நாய் சிப்பிப்பறையும் அவனுடன் சென்றது.வைகாசி மாதத்தில் அங்கு குளிர் குறைவுதான்.அவன் இருப்பது மலைப்பிரதேசம் ஆதலால் அதிகாலையில் பணியின் சுவடை என்றும் உணரலாம். இன்னும் அவனை பார்த்து சிரித்த பனிப்பூவைப் பார்த்தவண்ணம் அவன் ஓடையை அடைந்தான். என்றும் சலசலக்கும் ஓடையின் சத்தம் அவனுக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமான ஒன்று.மலையை விட்டு செல்லும் போது அந்த சத்தம் வரவில்லை என்றால் தான் அவனுக்கு கவலையாக இருக்கும். சில்லென்ற தண்ணீரைப் பார்த்ததுமே அவனது உடல் சிலிர்த்தது.அதிக நேரம் எடுக்காமல் ஓடையில் இறங்கி...