இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொக்கநாத சரிதம்

                           சொக்கநாத சரிதம் ' அம்மா !!!!' என்ற அலறல் குதிரையின் சென்று கொண்டிருந்த அவ்வீரனை திகைப்படையச் செய்தது. அது அந்தி சாயும் நேரம். அடர்ந்த காடு. இதனுள் ஒரு பெண்ணின் குரல் கேட்டதால் வந்த திகைப்பு அது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், குரல் வந்த திசையை நோக்கி சென்றான் அவன். காரிருள் சூழ்ந்திருந்தது போல அங்கு ஒரு யானை ஒரு யுவதியை மிதிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அவளைக் காப்பாற்ற யானையை திசை திருப்ப வேண்டும் என்று அவன் எண்ணினான். அதற்காக கையிலிருந்த கூர்வாளை அதனை நோக்கி விட்டெறிந்தான். அடி வாங்கிய அந்த யானை, அது நாடி வந்த யுவதியை விட்டு விட்டு வாளை விட்டெறிந்த இளைஞனை நோக்கி திரும்பியது.  அந்த மத யானையிடம் இருந்து தப்பிக்க, அங்குமிங்குமாய் குதிரை ஓட்ட ஆரம்பித்தான் அவன் . தான் போக வேண்டிய இடத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு திசையில் அவன் சென்றான் .சிறிது நேரம் அவனைப் பின்தொடர்ந்து வந்த அந்த யானை சிறிது நேரத்திலேயே பின்வாங்கி வேறு திசையில் சென்...

சீனுவும் சிறுத்தையும்-3

நல்லவேளையாக சீனு  ஏறிய மரம் சற்று சறுகலான மரம்.அதில் தன்னால் ஏற முடியாது என்று நினைத்த புலி🐅 ,அங்குமிங்கும் சுற்றி அலைந்தது. விளக்கு வைக்கும் நேரம் ஆகியும் சீனுவை காணாமல் பூஜாவும் அவன் அன்னையும் தவித்தனர்.பூஜா அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தாள்.  அந்த வழியே வந்த கலாம் சிங் அதனை கவனித்து விட்டார். அவர்கள் வீட்டுக்கு அருகே வந்து, 'என்ன அக்கா!!! சீனு இன்னும் வரவில்லையா' என்று கேட்டார்.'ஆமாம் தம்பி !!!ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துருக்கணும்..மழை வேறயா!!! பயமா இருக்கு' என்றார் சீனுவின் தாயார். 'இருங்க நம்ம ஆளுங்களை கூட்டிட்டு போய் பார்த்துட்டு வரேன்' என்றார்.உடனே பூஜா , 'இருங்க நானும் வரேன்' என்று அவளது அம்மாவின் மறுப்பையும் தாண்டி தன் தம்பியைத் தேடி அவருடன் ஓடினாள்.  மஞ்சரியில் இருந்து 10 ஆடவரும் நடுவில் பூஜாவும் கையில் லாந்தரை ஏந்தியபடி கெம்டி நோக்கி சென்றனர் .அனைவரின் கையிலும் கட்டைகளும் புலியைத் தாக்க  கோடாரிகளும் இருந்தன. காட்டை நெருங்கியதும் பூஜா, சீனுவை அழைத்தவாரே சென்றாள். மரத்தில் அமர்ந்திருந்த சீனு விற்கு அக்குரலை கேட்டதும் தைரியம் ஏற்பட்...