இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மு

பாட்டி வீட்டை நோக்கி செல்லும் போதே, எப்போது அம்முவைப் பார்க்கப் போகலாம், எப்போது விளையாடப் போகலாம் என்று மனம் சிந்திக்க ஆரம்பித்து விடும். ஆறு மாத காலமாய் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து, புதிதாய் பல கதைகள் பேசி, பொழுது ஓடிவிடும். பாட்டி வந்து அழைத்து செல்லும் வரை விளையாட்டு மட்டுமே நினைவில் நிற்கும். இது ஒவ்வொரு முறையும் மித்ரா அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது நடப்பதுதான் . மித்ரா அவளது பாட்டி வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்தாள். பக்கத்து வீட்டு குடிசையில் வாழும் அம்மு அவளது இணைபிரியாத சினேகிதி. மித்ராவின் தந்தை அவளை, பட்டணத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததால் அவள் அங்கேயே தாய் தந்தையருடன் குடிபெயர வேண்டிய நிலை. எனினும் ஒவ்வொரு விடுமுறையிலும் அவள் பாட்டி வீட்டிற்கு வந்து விடுவாள். நாட்கள் போவதே தெரியாமல் அம்முவுடன் விளையாடி பொழுது போய்விடும். அம்முவும் மித்ராவைப்போல பாட்டி வீட்டில்தான் இருந்தாள் என்றாலும், மித்ராவின் குடும்பத்தைப் போல அவளது குடும்பம் பொருளாதாரத்தில் மேம்படவில்லை. அம்முவிற்கு ஒரு அண்ணனும் இரண்டு தங்கையும் உண்டு. அம்முவின் பாட்டிக்கு துணையாக வீட்டில...

பயணங்கள்

சில பயணங்களுக்கு என்றும் முடிவே இல்லை.வாழ்க்கையே பயணமாய் விவரித்த கவிஞர்கள் பலர் உளர்.மன அழுத்தமோ சோர்வோ, பயணங்களுக்கு அதனைப் போக்கும் ஆற்றல் உண்டு. பயணங்கள் மேல் அப்படி ஒரு பற்று மித்ராவுக்கு முண்டு.  அவள் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் வேலை செய்ய ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருக்கும்.அவள் படித்த பள்ளியோ கல்லூரியோ கற்றுக் கொடுக்க இயலாத அனுபவ பாடங்களை பயணங்கள் வழங்கியுள்ளன. இம் மூன்று வருடங்களில் தான்  எத்தனை பயணங்கள்.  முதலில், விடுதியில் அவளுடன் தங்கியிருந்த தோழிகளின் வற்புறுத்தலால் ஆரம்பித்து பின் அவளுக்கே பயணங்கள் மீது பற்று அதிகம் உண்டாயிற்று. இரண்டு மாதம் எங்கும் செல்லாமல் விடுதிக்கும் அலுவலகத்திற்கும் சென்று வந்தாலே அவளது மனம் அடுத்து மேற்கொள்ளப்போகும் பயணத்திற்கு திட்டமிட ஆரம்பித்துவிடும். முதலில் இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நினைத்தவள், பின் ஒவ்வொரு மாதமும் அடுத்து வரும் பயணத்திற்கு தனியே சேமிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டாள்.மித்ரா விற்கு 25 வயதிருக்கும். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்றோரின் சொல் பேச்சை கேட்டு நல்லபடியாக முடித்தாள்...